Sunday, November 17, 2013

நவக்கிரக தலங்கள்


ஜோதிட சாஸ்திரம் மற்றும் கோள்களின் நிலைபாடு,அவற்றின் தாக்கம் ஓருவரின் வாழ்வில் ஏற்படுத்தும்
பாதிப்புகளில் நம்பிக்கையுள்ளவர்கள் அதற்கான பரிகாரங்கள் செய்ய தமிழ்நாட்டில் புகழ்பெற்ற
கோவில்கள் உள்ளன.'நவ' என்றால்ஒன்பது என்றும் 'கிரகம்' என்றால் கோள் என்றும் பொருள்படும்.
நவக்கிரகம் என்று அழைக்கப்படும் ஒன்பது கோள்களை குறிக்கும் தெய்வங்களுக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் உள்ளன.அவை தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் 60கி.மீ சுற்றில் அமைந்துள்ளது.
   

வரைப்படத்தை கிளிக் செய்யவும்
கோள்
கோவில்
சூரியன்
சூரியனார் கோவில்
சந்திரன்
திங்களூர் கோவில்
செவ்வாய்
வைத்தீஸ்வரன் கோவில்
புதன்
திருவெங்காடு
குரு
ஆலங்குடி
சுக்கிரன்
கஞ்சனூர்
சனி
திருநள்ளாறு
ராகு
திருநாகேஸ்வரம்
கேது
கீழ்பெரும்பள்ளம்
   
   
   
 
கிமு 1100-ல் ஆண்டு முதலாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்ட இக்கோவில் சுவாமிமலையி-
லிருந்து 21 கி.மீ தொலைவில் உள்ளது.இக்கோவிலில் குடிகொண்டுள்ள சூரியனார் ஆரோக்கியம்,
வெற்றி,வாழ்வில் செழுமை ஆகியவற்றை அளிக்க வல்லவர். பயிர், பச்சைகள் செழித்துவளர
ஓளிவழங்கும்  சூரியனாருக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் பிப்ரவரி மாதத்தில்
அறுவடைதிருவிழா கொண்டாடப்படுகிறது.
 
 
  
   
 
இக்கோவில்  கட்டப்பட்ட  காலம் கி.மு  7-ஆம் நூற்றாண்டாக  இருக்ககூடுமென  கருதப்படுகிறது.
சந்திரகடவுளுக்காக அமைக்கப்பட்ட  இக்கோவிலுக்கு சென்று வருவதால் நீண்ட  ஆயுளும்,
சுகமான வாழ்வும் கிடைக்கப் பெறும்.ஜோதிட சாஸ்திரப்படி,சந்திரனார் துன்பங்களையும்,
துயர்களையும் துடைக்கவல்லவர்.
 
 
  
   
 
இக்கோவில் அங்காரகன் எனப்படும் செவ்வாய் கடவுளுக்கு தனி சந்நிதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கடவுளை வணங்குபவருக்கு தைரியம்,வெற்றி பலம் ஆகியவை கிட்டும் என நம்ப்படுகிறது.
இக்கோவிலுக்குள்  நுழைந்தவுடன் பக்தர்கள்  ' சித்தமிருத்தா' குளத்திற்குச்  சென்று  தங்களை
தூய்மைப்படுத்திக் கொள்வது வழக்கம். இத்தண்ணீருக்கு  தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளை
சுகப்படுத்தும் தன்மை உண்டு என்றும் நம்பப்படுகிறது.
 
 
  
    
 
வால்மீகி ராமாயணத்தில் இத்திருத்தலம்பற்றிய குறிப்பு உள்ளது.எனவே 3000 வருடங்களுக்கு
மேலான பழமை  வாய்ந்த  இக்கோவில்  புதனாருக்காக  ஏற்படுத்தப்பட்டதாகும்.  நவக்கிரக
கோயில்களில் திருவெங்காடு கடைசிக் கோவிலாகும்.புதனின் அருள்பார்வையால் அறிவும்,புத்தி
சாதூர்யமும் கிட்டும்.
 
    
 
குருவிற்கான  தலமாகும். இங்கு  குருவின் அதிபதியான தட்சணாமூர்த்தி கடவுள் ஆராதிக்கப்
படுகிறார்.மற்ற கோள்களுக்கு குரு பகவான் இடப்பெயர்ச்சி ஆகும்போது இத்தலத்தில் சிறப்பு
பூஜைகள் செய்யப்படுவதால் பக்தர்கள் கூட்டம்  அலைமோதும்  சிவபெருமானிடமிருந்து  பிரிந்த
பார்வதிதேவி  மீண்டும் சிவனுடன் இணைவதற்கு முன் இங்குள்ள அமிர்தபுஷ்கர்னி கரையில்
பிறப்பெடுத்ததாக புராணம் கூறுகிறது.
 
 
  
    
 
சிவதலமான  கஞ்சன்னூர்  சுக்கிரனின்  தலமாக கருதப்பட்டு  மதுரை  ஆதினத்தால் பாதுகாக்கப்
பட்டு வருகிறது.திருவாவடுதுறை என்ற இடத்தில் இவ்வூர் உள்ளது இத்திருத்தலம்  பாலசவனம்,
பிரம்ம்புரி அக்னிஸ்தலம் என்றும் அறியப்படுகிறது.சிவ,பார்வதி திருமண காட்சியை பிரம்மா
இத்தலத்திலிருந்து கண்டதாக  கூறப்படுகிறது. கணவன்மார்கள் தங்களின் மனைவியரின்
நல்வாழ்விற்காக இங்கு வந்து வணங்கி செல்வதுண்டு.
 
 
  
    
 
இத்தலம் சனிபகவானுக்கென உள்ள ஒரே தலமாகும்.மற்ற கோள்களுக்கு சனி பகவான்
இடபெயர்ச்சி செய்யும்  தினத்தன்று  லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு
வருகைபுரிவார்கள்.நளமகராஜன் சனியின்  பார்வையால்  ஏற்பட்ட இடர்களை இங்கு
எழுந்தருளியுள்ள சனிபகவானை  வணங்கியபின் நீங்கப்பெற்றார்.பல்வேறு தீர்த்தக்குளங்களில்
நளதீர்த்தம் மிகவும் முக்கியமானதாகவும். இக்குளத்தில் குளிப்பதனால்ஒருவரது தீமைகள்
விலகிவிடும் என நம்பபடுகிறது.
 
 
  
    
 
நவக்கிரங்களில் ஒன்றான ராகுவிற்கான திருத்தலமாகும்.புராணங்களில் கூறப்பட்டுள்ள
ஆதிசேஷன்,தக்ஷன்,  கார்கோடகன்  எனும்   சர்ப்பங்கள்  சிவபெருமானை  இங்கு  வழிப்பட்டதாக
கூறப்படுகிறது. திருநள்ளாறு போன்றே இத்திருத்தலத்திலேயும் நளன் சிவனை வழிப்பட்டது
குறிப்பிடதக்கது.
 
 
  
   
 
இத்தலம் மிகவும் பழமை வாய்ந்த சிவதலமாகும்.நவக்கிரகங்களில் ஒன்றான கேது பகவான்
சிவனை இங்கு வழிப்பட்டார்.கேது பகவானிற்காக வரு தனி மூலஸ்தானம் இக்கோவிலில்
உள்ளது.தேவர்கள் பாற்கடலை  கடைய  உதவியாக  இருந்த  வாசுகி  நாகத்திற்கு  ராகுவும்,
கேதுவும்  உதவியதாக
புராணங்கள் கூறுகின்றன.

No comments: