Monday, December 30, 2013

புத்துணர்ச்சி தரும் காலை நேர உடற்பயிற்சி

காலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவிற்கு முன்னால் செய்யப்படுவது. வெறுவயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது மற்றும் இது காலை உணவிற்கு பிறகும், மத்திய உணவிற்கு பிறகும் செய்வதை விட மிகவும் ஏற்றது. காலை காற்று மிகவும் புத்துணர்ச்சி ஊட்ட கூடியது. இதில் ஆக்சிஜன் மற்ற நேரத்தை விட அதிகமாக உள்ளது. 

காலை காற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி ஆனது ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இது தான் அவர்கள் காலையில் முதலில் செய்யும் வேலை. காலையில்
தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. 

பழைய காலத்தில் மக்கள் சூரிய உதயத்திற்கு முன்னால் எழுவதை வழக்கமாக கொண்டிருந்தனர், அதோடு மட்டுமில்லாமல் உடற்பயிற்சி அல்லது சவாலான வேலைகளையும் செய்தனர். ஒரு முக்கிய நன்மை காலை உடற்பயிற்சியால் என்னவென்றால், அது நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. 

இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்பயிற்சியகம் அனைத்தின் மூலமும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. 

உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காலை உடற்பயிற்சியின் நன்மை என்பது உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. 

தினமும் காலை உடற்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் ஏதாவது ஒரு நாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டு விடும். இது என்னென்றால் மூளை அந்த பழக்கத்திற்கு பழகிவிடும். காலையில் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது. 

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்துவிட்டால் அதனை முன் குறிப்பீடு செய்ய வேண்டும். நீங்கள் வேற நேரத்தில் உடற்பயிற்சி செய்வதை விட காலை நேரத்தில்அதுவும் முன் குறிப்பீடு செய்து, செய்யும் உடற்பயிற்சி அதிக நன்மைகளை ஏற்படுத்துகிறது. 

அனைவரும் சுறுசுறுப்பான வேலை அட்டவணையை கொண்டுள்ளனர். எனவே உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவது மிகவும் கடினம். காலை பொழுதே அனைவருக்கும் உடற்பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் கவன சிதைவு மற்றும் பிறவளிபடுத்துகை போன்ற பிரச்சனைகள் இருக்காது. ஒருவருக்கு உடற்பயிற்சி செய்ய மிகவும் காலை தான் அமைதியான நேரம்.

No comments: