பதினைந்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை வங்கியிலிரு ந்து பணம் எடுப்பதே ஒரு (பரபரப்பான) அனுபவமாக இருக்கும்! வங்கிக்குப் போய், டோக்கன் வாங்கி, நம் வரிசை எண் வருகிற வரை காத்துக்கிடந்து, பணத்தைப் பெற்று, வீட்டுக்கு வருவதற்குள், ஒரு மணி நேரம் முதல் அரை நாள் போய்விடும். ஆனால், ஏ. டி. எம். வசதி வந்தபிறகு இன்றைக்கு ஒன்றிரண்டு நிமிடங்களில் பணத்தை எடுத்துவிட முடிகிறது. இன்றைக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேலே பணம் எடுக்கவேண்டும் என்றால் மட்டுமே வங்கிக்குச் செல்கிறோம்.
ஏ.டி.எம். வசதி மாதிரி, இன்று வங்கி கள் வழங்கும் பலவிதமான ஆன்லைன் வசதிகளைப் பயன்படுத்தினால், உங்கள் காரியங்களை இருந்த இடத்தில் இருந்தபடி எளிதாகச் செய்து முடிக்கலாம். இதனால் நேரமும் மிச்சம்; அலைச்சலும் இல்லை. கண்ணுக்குத் தெரியாமல் பெருமளவிலான பணத்தை மிச்சப்படுத்திச் சேமிக்க வும் செய்யலாம்.
அட, அப்படியா! வங்கிகள் வழங்கும் வெவ்வேறுவிதமான ஆன் லைன் வசதிகள் என்னென்ன என்று தானே கேட்கிறீர்கள்? ஒவ்வொன்றை பற்றியும் விளக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள்.
பலவிதமான ஆன்லைன் வங்கிச்சேவைகளைப் பெறுவதற்கு, ஆன்லைன் வசதி பெற்றிருப்பது அவசியம். ஆகவே, நீங்கள் ஏற்கெனவே வங்கியில் கணக்கு வைத்திருந்து உங்களிடம் ஆன்லைன் பேங்கிங் / இன்டர்நெட் பேங்கிங் வசதி இல்லையென்றால், உடனடியா க உங்கள் வங்கி மேலாளரை அணுகி ஆன்லைன் வசதிக்கு உண் டான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள்.