Saturday, November 16, 2013

பூசணிக்காய் புதூர் பொரியல்

பூசணிக்காய்தேங்காய் துருவல்தனியா பொடி
  1. பூசணிக்காய் = அரை கிலோ
  2. வெங்காயம் = 2
  3. மிளகாய் பொடி = கால் ஸ்பூன்
  4. தனியா பொடி = கால் ஸ்பூன்
  5. மஞ்சள் பொடி = சிறிதளவு
  6. தேங்காய் துருவல் = 4 ஸ்பூன்
  7. கடுகு = அரை ஸ்பூன்
  8. உளுத்தம் பருப்பு = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = 2 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • பூசணிக்காயை தோலும், விதையும் நிக்கி விட்ட பின் காலங்குல துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம் நறுக்கவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த பின் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொண்டு கீறிய பச்சை மிளகாய், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
  • அவை வதங்கியதும் பூசணிக்காயை சேர்த்து சிறிது வதக்கி உப்பு, மிளகாய் பொடி, தனியா பொடி, மஞ்சள் பொடி சேர்த்து மூடி வேக விடவும்.
  • 7 நிமிடம் வெந்தால் போதும் பொடி வாசனை அடங்கி விடும். தனியா பொடி சேர்ப்பதால் நீர் பதமும் அவ்வளவாக இருக்காது. தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்துப் பரிமாறவும்.
சுவையான பூசணிக்காய் புதூர் பொரியல் தயார். இதை ரைஸ் மற்றும் சப்பாத்தி, பரோட்டா, பொங்கல், உப்புமா, அடை, தோசை போன்றவற்றோடு பரிமாறலாம்.

No comments: