Saturday, November 16, 2013

வற்றல் குழம்பு

புளிதனியா பொடிமிளகாய் வற்றல்
தேவையான பொருள்கள்:
  1. புளி = எலுமிச்சை அளவு
  2. மிளகாய் வற்றல் = 8
  3. தனியா பொடி = 3 ஸ்பூன்
  4. தேங்காய் துருவல் = 3 ஸ்பூன்
  5. வெங்காயம் = 2
  6. தக்காளி = 2
  7. சீரகம் = அரை ஸ்பூன்
  8. கடுகு = அரை ஸ்பூன்
  9. எண்ணெய் = 4 ஸ்பூன்
  10. உப்பு = தேவையான அளவு
செய்முறை:
  • புளியை தேவையான அளவு தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.மிளகாயை இரண்டிரண்டாகக் கிள்ளி விதைகளை உதிர்த்து விட்டு சிறிது ஊற விட்டு தேங்காயோடு அரைத்து புளித்தண்ணீரில் கலக்கவும்.
  • உப்பு, தனியா பொடி, மஞ்சள் பொடி கலக்கவும். தக்காளி, வெங்காயம் தனி தனியாக நறுக்கவும்.
  • சிறிது எண்ணெயில் வெங்காயம், தக்காளி வதக்கி அதனோடு குழம்பை சேர்த்துக் கொதிக்க விடவும். மூடி வைத்துக் கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்ததும் மீதி எண்ணெயில் சீரகம், கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். கொத்தமல்லி சேர்க்கவும்.
சுவையான வற்றல் குழம்பு தயார். இதை ரைஸ், இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவற்றோடு பரிமாறலாம்.
மருத்துவ குணங்கள்:
  • புளியில் கலோரி, புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், ஃபைபர், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் A, வைட்டமின் B1, வைட்டமின் B2 ஆகியவை காணப்படுகிறது. ம‌லச்சிக்கல் மற்றும் காய்ச்சல் குறையும்.
  • இது பித்தம், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக்கடுப்பு, வெள்ளைப்படுதல், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் குறையும். வீக்கம், தொண்டை புண், அம்மை நோய் ஆகியவை குறையும்.


No comments: