Monday, December 30, 2013

முதுகை வலுபடுத்தும் பயிற்சி

முதுகை வலுபடுத்தும் பயிற்சிஇப்போதுள்ள காலகட்டத்தில் 10-ல் 8 பேர் முதுகு வலியால் அவதிப்படுகின்றனர். முதுகு வலிக்கு ஜிம்மில் பல விதமான உடற்பயிற்சிகள் உள்ளன. ஆனால் அவ்வாறு ஜிம்முக்கு செல்ல முடியாதவர்களுக்கு என்று சில குறிப்பிட்ட பயிற்சிகள் உள்ளன.அவற்றுள் மிக முக்கியமானது இந்த பயிற்சி. அவ்வாறு முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். மேலும் இந்த பயிற்சி முதலில் செய்யும் போது சற்று கடினமாக

தொப்பை குறைக்கும் பயிற்சி

தொப்பை குறைக்கும் பயிற்சிதொப்பை குறைய உள்ள பயிற்சிகளில் இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. முதலில் இந்த பயிற்சியை செய்ய ஆரம்பிப்பவர்களுக்கு சற்று கடினமாக இருக்கும். ஆனால் விரைவில் நல்ல பலனை கிடைக்கும். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுக்கவும். கைகளை மடக்கி தலையில் வைக்கவும். கால்களை முட்டி வரை மடக்கவும். பின்னர் கைகளை தலையில் வைத்தபடி முன்னால் எழ வேண்டும். இவ்வாறு ஆரம்பத்தில் 15 முறை செய்தால் போதுமானது. 

பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை

கால்களுக்கு வலிமை தரும் வால் ஸ்குவாட்ஸ் பயிற்சி

கால்களுக்கு வலிமை தரும் வால் ஸ்குவாட்ஸ் பயிற்சிகால்களுக்கு வலிமை தரும் பயிற்சிகளில் இந்த பயிற்சி மிகவும் சிறப்புடையது. இந்த பயிற்சி செய்ய ஜிம்முக்கு போக வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி கால்களுக்கு நல்ல வலிமை தருகிறது. மேலும் கால் தொடையில் உள்ள அதிகமான சதைப்பகுதியை குறைக்கவும் உதவுகிறது. இந்த பயிற்சி செய்ய சுவற்றின் அருகில் நிற்கவும். பின்னர் உங்களுடைய முதுகை சுவற்றுக்கு நேராக நிறுத்தி வைத்து விட்டு, தொடைப்பகுதியை தரைக்கு இணையாக கொண்டு வரவும். 

பின்னர், முழங்கால்களை தரைக்கு 90 டிகிரி கோணத்தில்

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சி

கைகளுக்கு வலிமை தரும் வால் புஷ்-அப்ஸ் பயிற்சிகைகளுக்கு வலிமை தர பல பயிற்சிகள் இருந்தாலும் ஒரு சில பயிற்சிகள் விரைவில் நல்ல பலன் தரக்கூடியவை. அவற்றுள் ஒன்று தான் இந்த வால் புஷ் அப்ஸ் பயிற்சி. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் நிலையான, சமதளமாக உள்ள சுவற்றுக்கு நேராக, சுவரும் - தரையும் இணையும் இடத்தில் இருந்து சற்றே தள்ளி நிற்கவும். முன்பக்கமாக சாய்ந்து, சுவற்றின் சமதளத்தில் உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும். இந்த செயலின் போது உங்கள் முழங்கைகள் இரண்டும் முறுக்கிக் கொள்ளமால் நேராக இருக்க வேண்டும். உடல் பகுதி முழுமையும் ஈடுபடும் வகையில், உங்களுடைய மூக்கு சுவரைத் தொடும்

தோள்பட்டை வலுவடைய செய்யும் பயிற்சி

தோள்பட்டை வலுவடைய செய்யும் பயிற்சிதோள்பட்டை வலுவடைய செய்ய சீட்டட் ரோ (Seated Row) என்ற பயிற்சி சிறந்தது. இந்த பயிற்சி செய்ய நாற்காலியின் விளிம்பில் நேரமாக அமர்ந்து கொள்ளவும். முழங்கால்களை மடங்கியிருக்குமாறும், பாதங்கள் தரையில் சற்றே அகலமாக இருக்குமாறும் உங்களுக்கு முன் வையுங்கள்.பயிற்சிக்கான பாண்டை உங்கள் பாதத்தை குறுக்கு நெடுக்காக சுற்றிக்கொண்டு இரண்டு கைகளாலும் பிடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது உங்கள் கைகள் இரண்டையும் துடுப்பு போடுவது போல வளைத்து இழுக்கவும். 

இந்த செயலின் போது தோள்பட்டைகள் இரண்டிற்கும்

கால்களுக்கு வலிமை தரும் பயிற்சி

கால்களுக்கு வலிமை தரும் பயிற்சிகால்களுக்கு வலிமை தரும் பயிற்சிகள் பல உள்ளன. அவற்றில் இந்த பயிற்சி மிக முக்கியமானது. இந்த பயிற்சியை தொடர்ந்துசெய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் மல்லாந்து படுத்து கால்களை நேராக நீட்டிக் கொள்ளவும்.கைகளை தோள்பட்டை வரை நீட்டி தரையில் பதித்தபடி வைக்கவும். பின்னர் கால்களை மேல் நோக்கி (90 டிகிரியில்) தூக்கவும். பின்னர் மெதுவாக கால்களை சேர்த்து வைத்தபடி இடது பக்கமாக சற்று சாய்க்கவும். 

இந்த நிலையில் 15 விநாடிகள் இருந்த பின்னர் பழைய

முதுகு தண்டிற்கு வலிமை தரும் பயிற்சி

முதுகு தண்டிற்கு வலிமை தரும் பயிற்சிஉடலுக்கு வலிமை தரும் பயிற்சிகளில் மிகவும் எளிமையானதும் விரைவில் பலன் தரக்கூடியதுமான பயிற்சி இது. இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து 20 நிமிடம் செய்து வந்தால் போதுமானது. முதுகு வலி பிரச்சனை இருப்பவர்கள் இந்த பயிற்சியை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த பயிற்சி கால்களுக்கு நல்ல வலிமை தரும். 

இந்த பயிற்சி செய்யும் முறை: 

முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக்கொள்ளவும். கைகளை மடக்கி தலையின் அடியில் வைக்கவும். கால்களை 90 டிகிரியில் மேலே தூக்கவும். இப்போது சற்று முன்னால் எழுந்து படத்தில் உள்ளபடி வலது கையால் இடது காலை

உடல் எடை குறையச் செய்யும் உடற்பயிற்சி

உடல் எடை குறையச் செய்யும் உடற்பயிற்சிஇந்த பயிற்சி வீட்டில் இருந்தபடியே செய்யக்கூடிய எளிய பயிற்சி முறையாகும். எடை குறைய விரும்பும் பெண்களுக்கு இந்த பயிற்சி சிறந்தது. இந்த பயிற்சி செய்ய உடற்பயிற்சி கூடத்திற்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 30 நிமிடம் செய்தால் போதுமானது. 
இந்த பயிற்சி செய்முறை : 

விரிப்பில் கால்களுக்கு இடையே சிறிது இடைவெளி விட்டு டம்ப்பெல்ஸ் இரண்டு கைகளால் பிடித்துக் கொண்டு நேராக நிற்கவும். முதலில் படம் A யில் உள்ளபடி நிற்க வேண்டும். பின்னர் படம் Bயில் உள்ளபடி நாற்காலியில் உட்காருவதை

தொப்பை குறைய எளிய பயிற்சி

தொப்பை குறைய எளிய பயிற்சிதொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் சில பயிற்சிகள் மட்டுமே விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. அந்த வகையில் இந்த பயிற்சி வீட்டில் இருந்தபடியே தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. பெண்களுக்கு பிரசவம் முடிந்த பின்னர் ஏற்படும் தொப்பை குறைய இந்த பயிற்சியை செய்யலாம். ஆனால் சிசேரியன் செய்தவர்கள் குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு பின்னர் மருத்துவரின் ஆலோசனை பெற்ற பின்னர் தான் இந்த பயிற்சியை செய்ய வேண்டும். இந்த பயிற்சி செய்ய விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்து கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். கால்களை தரையில் இருந்து ஒரு அடி மேல்

கால்களை வலுவாக்கும் பயிற்சி

கால்களை வலுவாக்கும் பயிற்சிதற்போதுள்ள காலகட்டத்தில் உடற்பயிற்சிகள் வாழ்க்கையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பயிற்சி உபகரணங்கள் இல்லாமல் செய்யும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தரக்கூடியவையே. வீட்டில் இருக்கும் பெண்கள் பயிற்சி உபகரணங்கள் இல்லாமல் செய்யும் சில பயிற்சிகள் உள்ளன. அவர்கள் உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே தினமும் 20 நிமிடம் செய்தால் போதுமானது. இந்த பயிற்சி மிகவும் எளிமையானது. முதலில் இந்த பயிற்சி செய்யும் போது சற்று கடினமாக

கால்களை வலுவாக்கும் நடைப்பயிற்சி

நடைப்பயிற்சி தசைகளை இதமாக்கி உடம்பை ஓய்வு நிலையில் வைக்கிறது. இதனால் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்க முடியும். கால் மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்பை நடைப்பயிற்சி கரைய வைக்கிறது. தினமும் நடக்கும் போது கால்கள் மிகவும் வலிமையடைகிறது.   
தினமும் நடப்பதற்கு என நாம் நிச்சயம் சில நிமிடங்களை ஒதுக்குவது இன்றியமையாத விஷயமாக உள்ளது.  நடைப்பயிற்சி தான் நமக்கு மிகச் சிறந்த, எளிமையான மற்றும் உடல் திசுக்களை காயப்படுத்தாத இயற்கையான உடற்பயிற்சியாக

புத்துணர்ச்சி தரும் காலை நேர உடற்பயிற்சி

காலை உடற்பயிற்சி என்பது பொதுவாக காலை உணவிற்கு முன்னால் செய்யப்படுவது. வெறுவயிற்றில் உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது மற்றும் இது காலை உணவிற்கு பிறகும், மத்திய உணவிற்கு பிறகும் செய்வதை விட மிகவும் ஏற்றது. காலை காற்று மிகவும் புத்துணர்ச்சி ஊட்ட கூடியது. இதில் ஆக்சிஜன் மற்ற நேரத்தை விட அதிகமாக உள்ளது. 

காலை காற்றில் உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மிகவும் நல்லது. காலையில் தொடர்ந்து செய்யும் உடற்பயிற்சி ஆனது ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. இது தான் அவர்கள் காலையில் முதலில் செய்யும் வேலை. காலையில்

ஈஸியாக செய்யக்கூடிய சிறப்பான உடற்பயிற்சிகள்

ஈஸியாக செய்யக்கூடிய சிறப்பான உடற்பயிற்சிகள்நம்மில் பலருக்கும் போதுமான அளவு ஜிம்முக்கு சென்று தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதற்கான நேரமோ, சக்தியோ அல்லது வசதியோ இருப்பதில்லை. உடல் உறுதியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகளை சிகிச்சை மையத்தில் தொடர்ந்து செய்ததன் மூலமாக, வாக்கர்களை பயன்படுத்தி நடந்து வந்த 80 மற்றும் 90 வயதான பெரியவர்கள் பலரும், பத்தே வாரங்களில் இப்பொழுது வெறும் குச்சிகளைப் பிடித்துக் கொண்டே நடக்கிறார்கள் என்று, அண்மையில் நடந்த ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

அப்படி வீட்டிலேயே செய்யக் கூடிய தசைகளை வலிமையாக்கும் பயிற்சிகள் உள்ளன. இவை ஒரு நிலையான நாற்காலி, பயிற்சிக்கான

முதுகுக்கு வலிமை தரும் பயிற்சி

முதுகுக்கு வலிமை தரும் பயிற்சிநெடு நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், தொடர்ந்து நீண்ட தூரம் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் முகுது வலி பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள். அப்படி முதுகு வலி பிரச்சனை உள்ளவர்கள் இந்த உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். 
முதுகு வலி பிரச்சனைக்காக ஜிம்முக்கு போக வேண்டும் என்பதில்லை இந்த பயிற்சியை தினமும் 30 நிமிடம் செய்து வந்தால் போதுமானது. இந்த பயிற்சி செய்ய விரிப்பில் நேராக நின்று கொள்ளவும். பின்னர் கால்களை

உடலுக்கு வலிமை தரும் பயிற்சி

உடல் முழுவதிற்கும் வலிமை தரும் பயிற்சிகள் பல உள்ளன. ஆனால் அந்த வகை பயிற்சிகளை செய்ய ஜிம்முக்கு தான் செல்ல வேண்டும். அவ்வாறு ஜிம்முக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய பயிற்சி ஒன்று உள்ளது. 

இந்த பயிற்சியை தினமும் 10 நிமிடம் செய்தால் போதுமானது. உடலுக்கு வலிமையும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். புதிதாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இந்த பயிற்சி ஆரம்பத்தில் சற்று கடினமாக

ஆயுளை அதிகரிக்கும் உடற்பயிற்சி

இந்த அவசர உலகத்தில் வேலை பார்க்க மட்டும் தான் பலருக்கும் நேரம் உள்ளது. உடலை பராமரிக்க நேரம் கிடைப்பதில்லை. மேலும் பார்க்கும் வேலைகளிலும் உடல் உழைப்பு இருப்பதில்லை. இதனால் பாதிப்படைய போவது உடல் தான். ஆகவே உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியமான ஒன்றாகும். 

ஒழுங்கான உணவு மற்றும் உடற்பயிற்சியின் கலவை தான் நல்ல கட்டமைப்போடு இருக்கும் உடல். நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனமாக இருக்கும் போது உடற்பயிற்சியை மறந்தே விடுவோம். உணவிற்கு தரும் முக்கியத்துவத்தை போல் உடற்பயிற்சிக்கும் தர வேண்டும். 

உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகையான தேவைப்பாடுகளுக்கு பல வகையான உடற்பயிற்சி உள்ளன. சில உடற்பயிற்சி ஆரோக்கியமான உடல் நலத்துக்கும், சில உடற்பயிற்சி நோயை குணப்படுத்தவும் உதவும். யோகா, தியானம் போன்ற சில உடற்பயிற்சிகள் மன நலனுக்காகவும் பயன்படுகிறது. 

இப்போது அத்தகைய உடற்பயிற்சியினால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளை இங்கு காண்போம். தினசரி 30–45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும், ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன நிலையையும் நன்றாக வைக்க உதவும். 

மேலும் புதிய நியூரான்களை உருவாக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் அல்சைமர் அல்லது பார்கின்சன் போன்ற மன நோய்களிலிருந்து விடுபடலாம். குறிப்பாக வாழ்க்கையின் பின் நாட்களில் மன நோய் ஏற்பட்டாலும் அதை தடுக்கும் ஆற்றல் உடற்பயிற்சிக்கு உண்டு. 

உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும் மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் கவலைகளும் நீங்கும். உடற்பயிற்சி செய்தால் பலவிதமான நோய்களில் இருந்து இதயம் பாதுகாப்பாக இருக்கும். 

பரம்பரையாக இதய நோய் இருந்தால் உடற்பயிற்சி செய்வதால் நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வந்தால் இதய நோய்களை விரட்டி விடலாம். ஆரோக்கியமான உடல் எடையோடு இருப்பது தான் அனைவரின் கனவு. இதை அடைவதற்கு உடற்பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது. 

தேவையான உடற்பயிற்சியுடன் சரியான உணவை உட்கொண்டால் உடல் கட்டமைப்போடு அழகாக காட்சியளிக்கும். உடல் எடையை குறைக்க மட்டும் உடற்பயிற்சி உதவுவதில்லை. அதிக எடை உள்ளவர்களுக்கு ஏற்படும் சர்க்கரை நோயை தடுக்கவும் உதவியாக இருக்கும். 

அதிலும் தினசரி உடற்பயிற்சி செய்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை ‘அமைதியான கொலைகாரன்’ என்று அழைப்பர். உயர் ரத்த அழுத்தம் வராமல் தடுக்க சீரான முறையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். 

மேலும் தசைகளுக்கு அதிக ஆக்சிஜன் கிடைக்கும். இதனால் ரத்தக்குழாய்கள் ஓய்வெடுக்க உதவுவதால் ரத்த அழுத்தம் வருவதையும் தடுக்கும். அவ்வப்போது உடற்பயிற்சி செய்வதால் அதிகப்படியான வியர்வையானது நம்மை சோர்வடைய செய்யும். ஆனால் தொடர்ச்சியாக செய்தோமானால் உடல் உறுதி அதிகரித்து அயர்ச்சியை குறைக்கும். 

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் நோய் தடுப்பாற்றல் அமைப்பு அதிகரிக்கும். இதனால் சளி, காய்ச்சல் போன்ற பல வகையான நோய்களில் இருந்தும் விடுபடலாம். உடற்பயிற்சி உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருக்கும். அதிலும் உடல் தடித்தல், சர்க்கரை நோய், இதய நோய், ரத்தக்கொதிப்பு மற்றும் வாதம் போன்ற பிரச்சினையில் இருந்து நம்மை பாதுகாக்கும். 

உடற்பயிற்சி உடம்பில் உள்ள நல்ல கொழுப்பின் அளவை கூட்டி, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும். மேலும் இதயத்தில் உள்ள தமனிகளில் ரத்தம் உறைதல் உருவாக்குவதை தடுக்கும். உடற்பயிற்சி தசைகளின் வலுவை அதிகரிக்க துணை புரியும். இதனால் வயதாகும் போது தசைகளின் இயக்கத்தை நிலை நிறுத்த உதவும். 

மனநிலையை ஊக்குவிக்கும் உணவு முறையை நம்புவதற்கு பதிலாக உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. ஏனெனில் உடற்பயிற்சி மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களுக்கு அதிகப்படியான தூண்டு தலை கொடுப்பதால் மனநிலையை சந்தோஷமாகவும் அமைதியாகவும் வைத்திருக்கும். 

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்தால் தசைகளின் வலிமை கூடும். ஆற்றல் அதிகரிக்கும். மேலும் திசுக்களுக்கு தேவையான அளவு ஆக்சிஜன் கிடைக்க உதவிபுரியும். உடற்பயிற்சி செய்தால் கடுமையான வேலைக்கு பின் தூக்கம் வருவது போல தூக்கம் வரும். ஆனால் தூங்குவதற்கு முன் கண்டிபாக உடற்பயிற்சி செய்யக்கூடாது. 

தினசரி உடற்பயிற்சி செய்வது எலும்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும். இதனால் ஆஸ்டியோ போரோசிஸ் மற்றும் ஆர்தரிடிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம். உடற்பயிற்சி குடல் புற்று நோய், மார்பக புற்று நோய் மற்றும் நுரையீரல் புற்று நோய் போன்ற பல வகையான புற்று நோய்கள் வருவதை குறைக்க உதவி புரிகிறது. 

அதனால் உடற்பயிற்சி செய்து புற்று நோய் வரும் அபாயத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளுங்கள். நீண்ட ஆயுள் தினசரி உடற்பயிற்சி செய்வதால் ஆயுள் பல வருடம் கூடும். ஆயுளை கூட்டுவதோடு மட்டுமல்லாமல் வயதானாலும் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 

முதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள் வலியை குறைக்க உடலை சிறிது வளைத்து உடற்பயிற்சி செய்யலாம். முதுகு வலியை மருந்துகள் மூலம் குணப்படுத்துவதை விட உடற்பயிற்சி மூலம் குறைப்பதே சிறந்த வழி. படிப்பாற்றல் அதிகரிக்கும் தினசரி உடற்பயிற்சி செய்தால் மூளையின் ரசாயன அளவு அதிகரிக்கும். 

இது புதிய மூளை அணுக்களை உருவாக்கி மூளையில் உள்ள அணுக்களின் மத்தியில் இணைப்பை உருவாக்கும். அதனால் புதிய விஷயங்களை படிக்கவும், புரியவும் உதவும். டென்னிஸ், கூடைப்பந்து போன்ற கடின பயிற்சியையும் மேற்கொண்டால் படிப்புத்திறன் மற்றும் மன ஒருமித்தல் திறன் அதிகரிக்கும்

நடைப்பயிற்சி

உடல் நலத்தில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் முதலில் கடைப்பிடிப்பது நடைப்பயிற்சிதான். அதிகாலையில் பயிற்சி செய்தால், அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். சர்க்கரைநோய், உடல் பருமன், இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைத் தவிர்க்கவும் முடியும். 

நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ எதுவானாலும் அதை முறையோடு செய்யவில்லை என்றால், மூட்டு மற்றும் கால் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். 'ஓடுவதால் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ, அதேபோல் முறையாக ஓடவில்லை என்றால் பாதிப்புகளும் வரும். 

ஓட்டப் பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு 'ரன்னர்ஸ் நீ’ (runners knee) என்ற பிரச்சனை

Saturday, December 28, 2013

ஆதார் அட்டை குழப்பங்கள்: செய்ய வேண்டியது என்ன?- அதிகாரிகள் விளக்கம்


ஆதார் அட்டை கிடைப்பதில் பல குழப்பங்கள் உள்ளன. இது குறித்த செய்தியை ’தி இந்து’ வெளியிட்டிருந்தது. அதனால் ஆதார் அட்டை பெறுவதில் இருக்கும் குழப்பங்களை மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெளிவு படுத்தி இருக்கின்றனர்.

பதிவேட்டில் விடுபட்டவர்களுக்கு...

2010-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் (என்.பி.ஆர்) பலர் விடுபட்டுள்ளனர். இதனால் வார்டு அலுவலகம், தாலுகா அலுவலகம் என பல இடங்களுக்கு முதியோர்கள் உட்படபலர் அலைக்கழிக்கப்படு கின்றனர். இதனை தவிர்த்து என்.பி.ஆர்-ல் தங்கள் பெயர்களை சேர்க்க வேண்டிய வழிமுறைகள் பற்றி அதிகாரிகள் கூறியதாவது:

Tuesday, December 24, 2013

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதி உள்ள இடங்களும்




1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் க...ோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள

திருவள்ளுவர்


Thiruvalluvar
‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி, ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் ‘திருக்குறள்’ என்னும் உன்னதப் படைப்பில் மக்களுக்கு எடுத்துச் சொன்னவர், திருவள்ளுவர். உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளைப் படைத்து, உலக இலக்கிய அரங்கில் தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெற செய்தவர். இவர் உலக மக்களால், ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள், வாழ்வியலின் எல்லா அங்கங்களையும் இனம், மொழி, பாலின பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால், திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர். அத்தகைய சிறப்புமிக்கத் திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு மற்றும் உலக இலக்கிய அரங்கில் அவர் படைத்த சாதனைகள் பற்றி